![]() |
தாம் வாழும் சமூகத்தின் துயர் துடைக்கும் உயரிய சிந்தனையினை கொண்டு சமூக சேவை ஆற்றி வரும் துறைநீலாவணையினை சேர்ந்த குமாரசிங்கம் விநோதாஸ் அவர்களின் இடை விடாத முயற்சி காரணமாக இவ் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது .
இந்த நிகழ்வுக்கு துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் விவாக ,பிறப்பு, இறப்பு பதிவாளர் திரு .தி .புகழேந்தி முதலானோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர் .
நிகழ்வின் தலைமை உரையினை ஆற்றிய கு.விநோதாஸ் அவர்கள் தலைமை உரை ஆற்றினார் .அவர் தனது உரையில் , இது போன்ற நிகழ்வுகள் மூலம் எமது சமுதாயத்தினை மேலும் வலுப்படுத்த முடியும் , என்னை போன்று இன்னும் பலர் பல உதவிகளை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் , அத்தோடு கண்ணகி அம்மன் ஆலயத்தின் மூலம் இது போன்ற உதவிகள் மக்களை சென்றடைய வேண்டும் என நான் விரும்புகின்றேன் .என கூறினார் .
அதனை அடுத்து உரையாற்றிய துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய செயலாளர் ஆ.லெவ்விதன் இந்த முயற்சி இத்துடன் முடிவடைய கூடாது , இனி வரும் காலங்களில் இடம் பெற வேண்டும் அத்தோடு இராசம்மா அன்பளிப்பு நிதியத்துக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறினார் .
அதனை அடுத்து அதிதிகளால் பயனாளிகளுக்கு அரிசி பொதி வழங்கி வைக்கப்பட்ட்து .
"மக்கள் சேவையே மகேசன் சேவை"