வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2011/08/15

கிரிஸ் பூதங்களின் அட்டகாசத்தால் துறைநீலாவணை போலிஸ் நிலையம் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

கடந்த இரவு துறைநீலாவணைக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் துறைநீலாவணையில் உள்ள ஒரு வீட்டினுள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர் . அப்போது அவர்கள் கூக்குரல் இட இளைஞர்கள் அவ்விடத்தை முற்றுகை இட்டனர் .அப்போது மர்ம மனிதர்கள் ஆளுககொரு திசையில் ஓட்டம் பிடித்தனர்.இவர்களை பின்தொடர்ந்து துரத்தி சென்ற பொதுமக்களும் இளைனர்களும்  இவர்களில் ஒரு சிலர் துறைநீலாவணை போலிஸ் நிலையத்தினுள் நுழைந்ததை கண்டனர். உடன் பொலிசாரிடம் மர்மமநிதர்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என இளைஞர்கள் கேட்டபோது பொலிசார் அப்படி எவரும் போலிஸ் நிலையத்தினுள் வரவில்லலை என கூற வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைத்த பொதுமக்கள் போலிஸ் நிலையத்தை உடைத்தனர்.

2011/08/12

துறைநீலாவணையில் மர்ம மனிதர்களால் பீதி

தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்ந்துள்ள மர்ம மனிதர்கள்(கிரீஸ் மனிதன்)   11-08-2011 வியாழன் இரவு மருதமுனை நீலாவணை முதலான கிராமங்களுக் குள் நுழைந்ததை அடுத்து அன்று இரவு பதினொரு (11 )மணியளவில் துறைநீலாவணை பொது மக்களுக்கான விழிப்புணர்வுக்காக கிராம இளைனர்களால்  ஆலய ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டது .