வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2011/08/12

துறைநீலாவணையில் மர்ம மனிதர்களால் பீதி

தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்ந்துள்ள மர்ம மனிதர்கள்(கிரீஸ் மனிதன்)   11-08-2011 வியாழன் இரவு மருதமுனை நீலாவணை முதலான கிராமங்களுக் குள் நுழைந்ததை அடுத்து அன்று இரவு பதினொரு (11 )மணியளவில் துறைநீலாவணை பொது மக்களுக்கான விழிப்புணர்வுக்காக கிராம இளைனர்களால்  ஆலய ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டது .

நித்திரையில் இருந்த பொதுமக்களை இவ் அறிவித்தல் பெரும் பீதிக்குள்ளாக்கியது;உடன் மக்கள் உசாராகி இரவென்றும் பாராமல் வீதிக்கு வந்தனர் .
துறைநீலாவணை கிராமத்தை சேர்ந்த துடிப்பான இளைஞர்கள் இரவு பூராக மோட்டார் சைக்கிளில் ஊர் வீதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர் .
மர்ம மனிதர்கள் கிராமத்தினுள் நுழையாததால்    எந்த அசம்பாவிதமும் இடம்பெறவில்லை.
உடம்பில் கிரிஸ் பூசிக்கொண்டு திரியும் மர்ம மனிதர்கள் பெண்களின் மார்புகளில் இருக்கும் இரத்தத்தினை  மார்பினை ஊசி மூலம் குத்தி மார்பினை நன்றாக நசித்து இரத்தத்தினை எடுத்து செல்வதாக கூறப்படுகின்றது.இந்த மானப் போராட்டத்தில் கடும் எதிர்ப்பை காட்டும் பெண்கள் கொலை செய்யப்படுவதாகவும் அறிய முடிகின்றது .என்ன தேவைக்காக பெண்களின் மார்பில் உள்ள இரத்தம் எடுக்கப்படுகின்றது என்பது புரியாத புதிராகவே உள்ளது .
நாளுக்கு நாள் மர்ம மனிதர்கள் பற்றி வெளிவரும் விசித்திரமான் செய்திகளால் முழு இலங்கையும் பயத்தில் உறைந்து போயுள்ளது .
11-08-2011

கருத்துகள் இல்லை: