வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2012/05/21

துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம் 2012

 துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம்             2012-05-20 பி .ப 4 .30 மணியளவில் தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய முன்றலில் தலைவர் மு.தருமரெத்தினம் அவர்களது தலைமையில்  நடைபெற்றது.

கூட்டத்தின் முக்கிய நிகழ்வான நிருவாக சபை தெரிவு அப்போது இடம்பெற்றது,
முதலில் செயலாளர் தெரிவு இடம்பெற்றது.செயலாளராக இரண்டு பேர் தெரிவு செய்யப்பட்டனர்.இரண்டு பேரும் வாபஸ் வாங்க.பாட்டுவாளி குடியில் வேறு யாருமில்லை செயலாளர் பதவியை வேறு குடிக்கு வழங்குங்கள் என சபையினர் கூற தி.புகழேந்தி அவர்கள் உடன் தலையிட்டு பாட்டுவாளி குடிசசிகரன் அவர்களை காரியதரிசியாக முன்மொழிவுடன் தெரிவு செய்யப்பட்டார் .அதனை அடுத்து தலைவராக மயில்வாகனம் தெரிவு செய்யப்பட்டார்.பொருளாளராக துஷ்யந்தன் தெரிவு செய்யப்பட்டார்.
பழைய நிருவாக சபை கண்ணகி அம்மன் ஆலய வரலாற்றில் முக்கியமான ஒரு பணியினை மிகவும் திறமையாக செய்து முடித்திருந்தனர்.அதாவது மிகவும் பழமை வாய்ந்த அந்த ஆலயத்தை உடைத்து புதிய ஆலயம் ஒன்றை எட்டு மாதங்களில் கட்டி முடித்து கும்பாவிசேகம் செய்து இருந்தனர்.அதற்கான பணத்தினை பொது மக்கள் கொடுத்திருந்தாலும் அதை செய்வதற்கு அந்த நிருவாகம் பட்ட கஷ்டங்களை யாரும் நினைத்து பார்கவில்லை.
இருந்தாலும் தி .புகழேந்தி அவர்கள் மட்டும் கூட்டத்தின் போது எழுந்து பழைய நிருவாக சபைக்கு நன்றி கூறினார்.
நல்லவைகளை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும்.

பி ப 6 .30 மணியளவில் கூட்டம் பல விடயங்களுக்கு இறுதி முடிவு எடுக்க முடியாமல் கலைந்தது.
29-05-2012 அன்று திருக்கதவு திற த்தலுடன் இவ் வருட கண்ணகி விழா ஆரம்பமாகும்.


கருத்துகள் இல்லை: