வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2012/06/02

துறை நீலாவணையில் குடி நீருக்காக இன்று நண் பகல் ஆர்பாட்டம்

  
துறைநீலாவனைக்கு தேசிய நீர் வழங்கல் அமைப்பின் மூலம் வழங்கப் பட்டு வந்த குடி நீரை முற்றாக நிறுத்திவிட்டு முன்பு துறைநீலா வணைக்கு நீர் வழங்கிய பாழடைந்த கிணறுகளில் இருந்து நீர் வழங்க பிரதேச பொறியியலாளர் மேற்கொண்ட வேலைகளை உடன் நிறுத்தி தேசிய நீர் வழங்கல் சபை மூலம் மருதமுனை ,நீலாவணை ,கல்லாறு போன்ற கிராமங்களுக்கு வழங்கப்படும் அதே சுத்திகரிக்கப்பட்ட நீரே எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோசம் எழுப்பினர் .
நான்கு நாட்களுக்கு ஒரு முறை அரை மணி நேரம் நீர் வழங்கப்பட்டு வருவதையும் கண்டித்து பேசினர்.
அரசியல் ஏதிலிகளாக உள்ள துறைநீலாவணை கிராம மக்கள் தொன்று தொட்டு குடி நீருக்காக போராட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வாக்குகளை கேட்டு வரும் அரசியல் வாதிகளின் காதுகளுக்கு இந்த செய்தி ஒரு நாளும் கேட்பதே இல்லை.







கருத்துகள் இல்லை: