வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2019/05/22

துறைநீலாவணையில் வறிய குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு



குறுமண்வெளி இராசம்மா அன்பளிப்பு சங்கத்தினால்  துறைநீலாவணையில் இருந்து தெரிவு செய்யயப்படட  30 வறிய  குடும்பங்களுக்கு, 11.05.2019 அன்று காலை 10.00மணியளவில் துறைநீலாவணை வடக்கு -01 கிராம அதிகாரி காரியாலய முன்றலில்  அரிசி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது .

தாம் வாழும் சமூகத்தின் துயர் துடைக்கும் உயரிய சிந்தனையினை கொண்டு சமூக சேவை ஆற்றி வரும்  துறைநீலாவணையினை சேர்ந்த குமாரசிங்கம் விநோதாஸ் அவர்களின் இடை விடாத முயற்சி காரணமாக இவ் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது .

இந்த நிகழ்வுக்கு துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் விவாக ,பிறப்பு, இறப்பு பதிவாளர் திரு .தி .புகழேந்தி முதலானோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர் .

நிகழ்வின் தலைமை உரையினை ஆற்றிய கு.விநோதாஸ் அவர்கள் தலைமை உரை ஆற்றினார் .அவர் தனது உரையில் , இது போன்ற நிகழ்வுகள் மூலம் எமது சமுதாயத்தினை மேலும் வலுப்படுத்த முடியும் , என்னை போன்று இன்னும் பலர் பல உதவிகளை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் , அத்தோடு கண்ணகி அம்மன் ஆலயத்தின் மூலம் இது போன்ற உதவிகள் மக்களை சென்றடைய வேண்டும் என நான் விரும்புகின்றேன் .என கூறினார் .

அதனை அடுத்து உரையாற்றிய  துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய  செயலாளர் ஆ.லெவ்விதன்  இந்த முயற்சி இத்துடன் முடிவடைய கூடாது , இனி வரும் காலங்களில் இடம் பெற வேண்டும்  அத்தோடு  இராசம்மா அன்பளிப்பு நிதியத்துக்கு  எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறினார் .

அதனை அடுத்து அதிதிகளால் பயனாளிகளுக்கு அரிசி பொதி வழங்கி வைக்கப்பட்ட்து .

                    "மக்கள் சேவையே மகேசன் சேவை" 


































கருத்துகள் இல்லை: