சென்ற வாரம் பெய்த கடும் மழையினால் ஆர்பாட்ட வெள்ளத்தினால் பாதிககப்பட்ட துறைநீலாவணை மக்களுக்கு ஒப்பர் சிலோன் என்ற அரச சார்பற்ற நிறுவனம் அண்மையில் நிவாரணம் வழங்கியது . நிவாரணப் பொதி ஒன்றின் பெறுமதி 3500/= ரூபாவுக்கு
மேல் இருக்கும் .அரிசி ,பருப்பு .சீனி .மா . கருவாடு .குடிநீர் ,பால்மா முதலான பொருட்கள் அப் பொதியில் காணப்பட்டன . கிராம சேவை உத்தியோகத்தர்கள் நலன் விரும்பிகள் முதலானோரின் ஒத்துஉழைப்புடன் சம்மந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் திருப்தியான முறையில் இவ் நிவாரணப்பொருட்களை வழங்கினர் .குறிப்பிட்ட அரச சார்பற்ற நிறுவனத்துக்கு பொது மக்கள் நன்றிகளை தெரிவித்தனர் .
படங்களும் தகவலும் ;- துறைநீலாவணை முகுந்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக