துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உட்சவ பெருவிழா எதிர்வரும் 02 -07 -2011 அன்று திருக்கதவு திறப்புடன் ஆரம்பமாகி 08 -07 -2011 சக்கரை அமுதுடன் இவ்வருட உட்சவப் பெருவிழா இனிதே நிறைவு பெறவுள்ளது .
நிகழ்வுகள்
04 -07 -2011 -அம்மன் வீதி உலா
06 -07 -2011 -அம்மன் கலியாணக் கால் வெட்டும் சடங்கு
07 -07 -2011 -வட்டுக்குத்து சமுத்திர நீராடல்
08 -07 -2011 -காலை தீ மிதித்தல் பின்னேரம் சக்கரை அமுது
முதலான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அத்தோடு 06 -07 -2011,07 -07 -2011 -ஆகிய திகதிகளில் கலை நிகழ்வுகளும் இடம்பெறும் .அம்மன் அடியார்கள் இவ் உட்சவ காலங்களில் பக்தி சிரத்தையோடு அம்மனை வணங்கி அம்மனின் அருளை பெற்று உய்யுமாறு வேண்டிக் கொள்கின்றனனர் ஆலய பரிபாலன சபையினர்.
கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு உயர் திரு கு நல்லராசா குருக்கள் அவர்களால் நடாத்தப்படும்.
திரு யோகராசா அவர்களது தலைமையில் அவரோடு இணைந்து செயலாளராக கருணாநிதி பொருளாளராக இ .சுதாகரன் ஆகியோரது சிறந்த நிருவாக சபையினரால் மிகுந்த பொருட் செலவுடன் இவ் அம்மன் ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டு புனரமைப்பு பணி நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ள நிலையிலே இவ் வருட உத்சவ திருவிழா நடைபெறவுள்ளது.
தகவல்- துறைநீலாவணை இணைய செய்தியாளர் தே.முகுந்தன் .
-தி.புகழேந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக